


இசையால் அன்று நம்மை மயக்கிய மன்னர்
இரவு உணவு இல்லாதோருக்கும் இவர் இசைதான் டின்னர்
திரை இசை உலகில் இவர் என்றுமே வின்னர்
இசை அமைக்க வந்த எவருமே இவர் பின்னே ஓடி வரும் ரன்னர்!
தென்னிசை வட இசை மேற்கிசை கிழக்கிசை எல்லாமே
இன்னிசையாய் மாறும் இவர் கைக்குள் வந்தால்
ஆர்மோனியப் பெட்டி என்னும் அற்புதக் கருவி ஒன்றே
ஏர்முனையாய் நின்றுதவும் இவ்விசை உழவருக்கு.
வாத்தியங்கள் வணங்கி நிற்கும் கைகூப்பி இவரை
காத்திருக்கும் இவர் கை தம் மீது படர
சாத்தியமே இல்லாத வியப்பிசை வடிவங்கள்
பாத்தியாய்ப் படரும் இவர் இசைத் தோட்டத்தில்.
என்றும் ஒரே நிலவுதான் உலவும் வானத்தில்
என்றும் இவர் புகழ்தான் நிலவும் வையத்தில்
அன்று புதுப் புதுப் பாடல் இவர் வழங்கக் காத்திருந்தோம்
இன்றும் அவை புதிதாய் ஒலிப்பதைப் பார்த்து வியந்தோம்.
அமுதம் உண்டோர்க்கு மரணம் இல்லையாம்
அமுதுக்காகப் போரிட்டனர் தேவரும் அசுரர்களும்
அமுதைத் தேடி நாம் அவ்வுலகம் போக வேண்டாம்
அமுதாய் இவர் இசையை நாளும் நாம் பருகும்போது.
நன்றி மறவாத இசை ரசிகர் கூட்டம்
என்றும் இவர் புகழைப் பாடிப் போற்றும்
அன்று நமக்கு இசையை அமுதாய் இவர் வழங்கிய நன்மை
என்றும் இசை பாட இவர் வாழ்வார் உண்மை.

Love it!
Nice voice
So moving